ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க நடவடிக்கை : மத்திய பாஜக அரசின் முடிவுக்கு சுப்ரமணிய சுவாமி கண்டனம்
ஏர்இந்தியாவின் 100 சதவீதம் பங்குகளும் தனியாருக்கு விற்க மத்திய அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி கடனில் ரூபாய் உள்ளதாகவும், எனவே இதனை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் வரும் மார்ச் 17 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, மத்திய அரசின் இந்த முடிவு, தேச விரோதமானது என கூறியுள்ளார். இதனை தடுக்க நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story