"குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கமாட்டோம்" - அமித்ஷா

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டாலும், அதனை அமல்படுத்துவதில் ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் பின்வாங்கமாட்டோம் - அமித்ஷா
x
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இந்த சட்டம் குறித்து எவ்வளவு தவறான கருத்துக்களை பரப்ப முடியுமோ அவ்வளவுக்கு பரப்பிக் கொள்ளு​ங்கள் என எதிர்க்கட்சிகளை அமித்ஷா சாடியுள்ளார். மேலும், வாக்கு வங்கி அரசியலுக்காக சாவர்க்கரை காங்கிரஸ் கட்சி இழிவுப்படுத்தி வருவதாகவும், இதற்காக காங்கிரஸ் கட்சியின் வெட்கப்பட வேண்டும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்த சட்டத்தை எதிர்க்க காட்டும் அக்கறையை கோட்டாவில் நாள்தோறும் உயிரிழந்து வரும் குழந்தைகள் இறப்பை தடுக்க காட்டுங்கள் என அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலோட்டை சாடிய அமித்ஷா, உயிரிழந்த குழந்தைகளின் தாய்மார்கள் உங்களை திட்டிவருகின்றனர் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்