"குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு ஆபத்து" - கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்

"மக்களை பிரிக்கும் சூழ்ச்சி செய்கிறது பா.ஜ.க"
x
குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தால், அப்துல்கலாமைகூட இந்தியராக ஏற்க முடியாத நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பாஜகவின் தவறான கொள்கைகளை முதலில் எதிர்க்கட்சிகள் எதிர்த்த நிலையில், தற்போது பொதுமக்களும் மாணவர்களும் எதிர்த்து வருவதாக விமர்சித்தார். குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் எல்லாரையும் நாட்டை விட்டு அனுப்பிவிட்டு பா.ஜ.க.-வினர் மட்டும் என்ன செய்ய போகிறார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  


Next Story

மேலும் செய்திகள்