குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : கேரளாவில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இணைந்து போராட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
x
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்டும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாவும் ஒரே மேடையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பேசிய பினராயி விஜயன், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கேரளா ஒன்றாக நிற்கும் என்று தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்