ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டிசம்பர் 11ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு டிசம்பர் 11 வரை காவல் நீட்டிப்பு
x
ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டிசம்பர் 11ந் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அமலாக்கத் துறை தொடர்ந்த இந்த வழக்கில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததையொட்டி ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  காவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து ப.சிதம்பரத்தை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திகார் சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணை வரும் 29 ந்தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம் , அரசியல் சாசன தினத்தன்று மகாராஷ்டிராவில் நிகழ்ந்தது மிகப்பெரிய வெற்றி என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்