திமுக மீது பழிபோட வேண்டாம் - ஸ்டாலின்

திமுக மீது பழிபோடும் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக மீது பழிபோட வேண்டாம் - ஸ்டாலின்
x
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக் காலத்தில் தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் கொண்டு வரப்பட்டது என தெரிவித்துள்ளார். 

2016ல் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், நேரடித் தேர்தல் என அறிவித்த ஒரே வாரத்திலேயே மறைமுகத் தேர்தல் என அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

அமைச்சரவையில் கூட விவாதிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான காரணத்தை சொல்ல முடியாமல் இருப்பது ஏன்? என்றும் திமுக ஆட்சியில் வந்த திட்டங்கள் குறித்து பலமுறை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட போதும் அதை காது கொடுத்து கேட்கவில்லை எனவும் திமுக மீது பழிபோடும் போக்கை கைவிட்டு விட்டு உண்மையை பேச வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்