முடிவுக்கு வருகிறதா மகாராஷ்டிரா குழப்பம்?...
மகாராஷ்டிராவில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியாகாந்தியை, சரத்பவார் சந்தித்தபோது, கூட்டணிக்கான ஒப்புதலை தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Next Story