பிரதமர் நரேந்திரமோடியை கொல்ல திட்டம்-உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல திட்டம் தீட்டியதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது
பிரதமர் நரேந்திரமோடியை கொல்ல திட்டம்-உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
x
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு பிரதமர் நரேந்திரமோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஷம்ஷெர்வானி என்ற தீவிரவாதியின் உரையாடலை இடைமறித்து கேட்டபோது இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதாக மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுதவிர ஜம்மு, பதன்கோட், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், கான்பூர் மற்றும் லக்னோ உள்ளிட்ட 30 நகரங்களிலும் முக்கிய விமான நிலையங்களிலும் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாத இயக்கம் தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை  தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்