"காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்.2 - அக். 30 வரை யாத்திரை" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா உரையாடல்...
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்.2 - அக். 30 வரை யாத்திரை - முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
x
பா.ஜ.க தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, தமிழக பாஜக மாநில நிர்வாகிகளுடன், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில், தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவும் உடன் இருந்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்,  தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் இல கணேசன், வானதி சீனிவாசன், கே.டி. ராகவன் உள்ளிட்டோர் அமித்ஷா உடன் உரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி முதல், 30 ஆம் தேதி வரை பாதயாத்திரை நடத்த  உள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்