"மக்களுக்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"போராட்டத்தை திரும்ப பெற்றதற்கான உண்மையான காரணம் என்ன?"
x
இந்தி மொழிக்கு எதிராக தி.மு.க. போராடினால் ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலை தான் வரும் என மத்திய அரசு மிரட்டியதாலே, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போராட்டத்தை நடத்தவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், ஆளுநரின் பேச்சை கேட்டு போராட்டத்தை திரும்பப் பெற்றது ஏன் என மக்களுக்கு ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்