"சட்டத்தை மதித்து நடப்பவன் நான்" - கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்
சட்டவிரோத பணிபரிவர்த்தனை தொடர்பான புகாரில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆஜராக அமலாக்கத்துறை நேற்றிரவு சம்மன் அனுப்பி உள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணிபரிவர்த்தனை தொடர்பான புகாரில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆஜராக அமலாக்கத்துறை நேற்றிரவு சம்மன் அனுப்பி உள்ளதாக கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தாம் ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார். கவுரி பூஜை உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், தாமதமாக ஆஜராக அமலாக்கத்துறைக்கு தகவல் அளித்து உள்ளதாக தெரிவித்துள்ள டி.கே.சிவகுமார், இன்று அமலாக்கத் துறையில் ஆஜராகி அவர்களுக்கு தேவையான விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவித்தார். தாம் சட்டத்தை மதித்து நடப்பவன் என்றும், இதுவரை அப்படிதான் நடந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story