"ஆட்சி அமைக்க இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்" - சீமான்

"கூட்டாட்சி தத்துவத்தை செயல்படுத்த முடியவில்லை"
x
ஆட்சி அமைக்க இளைஞர்களுக்கு  வழிவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தீபலட்சுமியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர்,  கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நாட்டில், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சியை கொண்டு வரமுடியவில்லை என்று விமர்சனம் செய்தார். ஆட்சி அதிகாரத்தில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும், காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அதை செயல்படுத்தி ஆட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட்டார் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்