"நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்" - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை

மருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் - திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை
x
மருத்துவ படிப்பிற்கு நெக்ஸ்ட் (NEXT) தேர்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, திமுக எம்.பி திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் வெவ்வேறாக உள்ள நிலையில், ஒரே மாதிரியான மருத்துவ தேர்வு எப்படி உகந்ததாக இருக்குமென கேள்வி எழுப்பினார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் நெக்ஸ்ட் தேர்வு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், விவாத நிலையில் உள்ளபோது இதனை எப்படி அறிமுகம் செய்ய முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த நடவடிக்கை மாணவர்களின் மருத்துவ கனவை தடுக்கும் விதமாகவே அமையும் என்று அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்