தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...
x
எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய அவர், நேற்று முதல் முறையாக அங்கு சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார். நாட்டின் பிரதமராக மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத், அமேதி தொகுதி எம்பியாக ஸ்மிருதி இராணி உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். எதிர்கட்சி பணியை செய்யும் நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர், அது எளிதானது என்றும் மகிழ்ச்சி நிறைந்தது என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்