தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - துரைமுருகன்

தவறான பிரச்சாரம் செய்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - துரைமுருகன்
x
தவறான பிரச்சாரம் செய்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவேரி  கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம், திருப்பத்தூரில் இருந்து அரக்கோணம் வரை உள்ள பகுதிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கிடைப்பதாகவும் அந்த நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால், வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றே தான் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கருத்தை திரித்து பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்