தமிழகத்திலேயே தூத்துக்குடியில்தான் அதிக காற்று மாசு - அமைச்சர் கருப்பணன்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காற்று மாசுவை தடுக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.
x
இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் கருப்பணன், தமிழகத்திலேயே தூத்துக்குடியில்தான் அதிக காற்று மாசு உள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காற்றில் ஏற்படும் மாசை தடுக்கும் வகையில் மரங்களை வளர்ப்பது குறித்த கையேடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்