மத்திய அமைச்சர் ஆனார், ஜெய்சங்கர் : மோடி அமைச்சரவையை அலங்கரிக்கும் 2- வது தமிழர்

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் ஆகி இருக்கிறார்.
மத்திய அமைச்சர் ஆனார், ஜெய்சங்கர் : மோடி அமைச்சரவையை அலங்கரிக்கும் 2- வது தமிழர்
x
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் ஆகி இருக்கிறார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட, 64 வயது ஜெய்சங்கர், அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றி இருக்கிறார். டோக்லாம் விவகாரத்தில் சீன ராணுவம் ஊருடுவிய போது, பிரச்சினையை சிறப்பாக கையாண்டவர் என்ற பெருமையை ஜெய்சங்கர் பெற்றார். இந்திய அமைதி காப்பு படையின் முதல் செயலாளராக பதவி வகித்ததால், இலங்கை தமிழர் பிரச்சினையை இவர் நன்கு அறிந்துள்ளார்.  வெளியுறவு துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஜெய்சங்கர், இப்போது, மத்திய அமைச்சர் ஆகி உள்ளார். இதன் மூலம், மத்திய அமைச்சரவையை அலங்கரிக்கும் 2- வது தமிழர் என்ற பெருமையை ஜெய்சங்கர் பெற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்