துவங்கியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது.
x
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ராகுல்காந்தி தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்