சந்திரபாபு நாயுடுவுடன் துரை முருகன் திடீர் சந்திப்பு...

சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார்.
x
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசினார். ஆந்திர தலைநகர் அமராவதியில் நடைபெற்ற இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்னையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்நிலையில் துரைமுருகன், சந்திரபாபு நாயுடுவை சந்தித்துள்ளதால், அதுகுறித்த விவரங்களை கூறியிருப்பார் என தெரிகிறது. ஆனாலும்  சந்திரபாபு நாயுடுவை  , துரைமுருகன் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்