ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு...
3வது அணியை உருவாக்கும் முயற்சியா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
திமுக தலைவர் ஸ்டாலினை தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் இன்று சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக 3 வது அணியை உருவாக்கும் முயற்சியில இறங்கியுள்ள சந்திரசேகரராவ், ஏற்கனவே மம்தா பானர்ஜி, பினராயி விஜயனை சந்திச்சு பேசினார். ஸ்டாலின் உடனான சந்திப்பு நடக்காது என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில இன்று இந்த சந்திப்பு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில ஸ்டாலின் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்...சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதுவும் அரசியல் சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்டாலின் சந்திரசேகர ராவ் சந்திப்பு : வெளியுலகிற்கு உணர்த்தும் செய்தி என்ன ? - துரைகருணா கருத்து
ஸ்டாலின் சந்திரசேகர ராவ் சந்திப்பு : கே.எஸ்.அழகிரி கருத்து
Next Story