சந்திரசேகர ராவுடனான சந்திப்பு குறித்து கேரள முதலமைச்சர் விளக்கம்

மூன்றாவது அணி குறித்து தம்முடன் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விவாதித்ததாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர ராவுடனான சந்திப்பு குறித்து கேரள முதலமைச்சர் விளக்கம்
x
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அரசியல் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதித்ததாகவும்  தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பெறாத நிலையில், மத்தியில் ஆட்சி அமைப்பதில் மாநில கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தாங்கள் விவாதிக்கவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்