காங்கிரஸ் ஆட்சி ஊழலில் தி.மு.க.வுக்கு பங்கு - சரத்குமார் விமர்சனம்
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலில் திமுகவுக்கு பங்கு இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அகஸ்தீஸ்வரம் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் பொறுமை இல்லாமல் வெளிநடப்பு செய்து விடுவார் என்றும் சரத்குமார் கூறினார்.
Next Story