சிறுமியின் முகம் துடைத்து ப்ரியங்கா ஆறுதல்

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட ப்ரியங்கா காந்தியை, சிறுமி ஒருவர் ஆரத்தழுவி அழும் காட்சி வைரலாகி உள்ளது.
சிறுமியின் முகம் துடைத்து ப்ரியங்கா ஆறுதல்
x
சிலிஜார் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் செயலாளர் ப்ரியங்கா, திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அப்போது, வாகனத்துக்கு பின்னால் திரும்பிய அவர், திடீரென அழும் சிறுமியை கட்டி அணைத்து ஆற்றுப்படுத்தினார். சிறுமியின் முகத்தை துடைத்து விட்ட ப்ரியங்கா, சிறுமியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். ப்ரியங்கா காந்தியை அந்தச் சிறுமி, ஆரத் தழுவிய சம்பவம் தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்