"சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும்" - டிஜிபியிடம், திமுக சார்பில் புகார் மனு

சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும் - டிஜிபியிடம், திமுக சார்பில் புகார் மனு
x
சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,  தமிழகத்தில் ஆயிரத்து 668 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக  இருப்பதாகவும், அந்த வாக்குச்சாவடிகளுக்கு தீவிர பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளோம்  என்றார். சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உட்பட சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளை  இடமாற்றம் செய்யவேண்டும் எனவும்  மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்