உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான் - ஸ்டாலின்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நொடியே மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
x
தி.மு.க. கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயகுமார் ஆகியோரை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில்  பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்று கூறிய அவர், வரும் 18ம் தேதியை அதற்கு வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்