துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி அறக்கட்டளை வளாகத்தில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்

திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில், கட்டுக் கட்டாக இருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
x
திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில், கட்டுக் கட்டாக இருந்த 18 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 3 மணிக்கு துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், ஆவணம், பணம் ஏதும் கிடைக்கவில்லை என கூறி வருமான வரித்துறை திரும்பிச் சென்றதாக துரைமுருகன் தெரிவித்தார். ஆனால், 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது, துரைமுருகனின் நண்பரும், திமுக பிரமுகருமான நடுமோட்டூர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் நடைபெற்றுவரும் சோதனையில் 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கூறியுள்ளது. இதனிடையே, கல்புதூர் பகுதியில் உள்ள துரைமுருகனின் உதவியாளர் அஸ்தர் அலி வீட்டில், நடத்தப்பட்ட சோதனையில் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் சம்பவங்களை தொடர்ந்து, அங்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்