"தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி புரிந்து வருவது அ.தி.மு.க. மட்டுமே" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

"அ.தி.மு.க. அரசு காணாமல் போகும் என்று ஸ்டாலின் கூறி வருகிறார்"
x
தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் காந்தி மற்றும் மக்களவை தொகுதியில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் நடராஜனை ஆதரித்து தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். காவிரி பிரச்சனை உள்ளிட்டவற்றில் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமைகளை மீட்டு தந்தது 
அதிமுக அரசுதான் என்று அவர் தெரிவித்தார். ஆனால் இந்த தேர்தலோடு அதிமுக அரசு காணாமல் போகும் என்று ஸ்டாலின் கூறி வருவதாக கூறிய 
பன்னீர்செல்வம், தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி புரிந்து வருவது அதிமுக மட்டுமே என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்