"யார் பிரதமர் வேட்பாளர் என கூறமுடியாத கூட்டணி" - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தலைமையிலான தங்கள் கூட்டணியையும் பிரதமரையும் குறைகூறி வருகிறாரே தவிர, அவர்களின் வளர்ச்சித்திட்டத்தை பற்றி எதுவும் பேசுவதில்லை என்றார். மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என தெரியாத நிலை உள்ளதாகவும் பிரேமலதா கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்