அதிமுக கூட்டணியில் சமக? - நாளை முடிவு என சரத்குமார் தகவல்
துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமாரை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர். இந்த நிலையில். நாளை மாவட்ட செயலாளர்களை கூட்டி ஆலோசனை நடத்திய பின்னரே, அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
Next Story