அமைச்சர் வேலுமணி மீது திமுக லஞ்ச புகார்

புகார் மனு மீதான விளக்கம் கோரி ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்
அமைச்சர் வேலுமணி மீது திமுக லஞ்ச புகார்
x
சென்னையை அடுத்த ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு தந்தார். இந்த புகார் மனு மீது விசாரணைக்கு வருமாறு ஆர். எஸ்.பாரதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்தனர். இதையடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜரானார். அவரிடம், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஒரு மணி நேரம், விசாரணை நடத்தினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அவர், 
லஞ்ச ஒழிப்பு போலீசார் முன் ஆஜராகி குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்கள் காண்பித்ததாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்