கன்னியாகுமரி தொகுதிக்கு ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு

காங்கிரஸ் கட்சியின் முதல் விருப்ப மனு, ராகுல் காந்தி பெயரில் கன்னியாகுமரி தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
x
காங்கிரஸ் கட்சியின் சார்பாக சென்னை சத்திய மூர்த்தி பவனில் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கார்த்திக் சிதம்பரம் போட்டியிட விருப்ப மனு வாங்கி சென்றனர். தேனி தொகுதிக்கு ஜே.எம்.ஆரூண், ஆரணி தொகுதிக்கு செயல்தலைவர் விஷ்ணு பிரசாத் விருப்ப மனுவாங்கி சென்றனர். இதே போல, இரண்டாவது நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ஈவிகேஎஸ் இளங்கோவன், வசந்தகுமார், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பெயரிலும் விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்