பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளது - கே.எஸ். அழகிரி

பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
x
கன்னியாகுமரியில் வருகிற, 13 ஆம் தேதி நடைபெற உள்ள பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார். இது குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பிரசாரத்திற்கான, ஏற்பாடுகள், குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய, அழகிரி, பிரதமர் மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளதாகவும், இதே நிலை தொடர்ந்தால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்