"கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை உள்ளது" - தமிழிசை
அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார்.
அரசியல்வாதிகளை எப்போது, யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை கூறினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக, தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சி என்பதால் பாஜக - அதிமுக கூட்டணியில் இணையும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார். தமிழகத்தில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி மார்ச் 6 ஆம் தேதி வருகை தர உள்ள நிலையில், அதற்குள் கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Next Story