"பட்டதாரிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு" - பவன் கல்யான் அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப் போவதாக ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு - பவன் கல்யான் அறிவிப்பு
x
பட்டதாரிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப் போவதாக ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், சாலை மார்க்கமாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மக்கள் மத்தியில் பேசிய அவர் , தெலுங்கு தேசம்,  காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  ஆகிய கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக கூறினார். அதனால் தான்  மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மக்களுக்கு நன்மை செய்யாத எம்.எல்.ஏ.வை  மக்களே கேள்வி கேட்கும் வகையில் தமது ஆட்சி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்