வைகோ மீது காவல்நிலையத்தில் புகார்

திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
வைகோ மீது காவல்நிலையத்தில் புகார்
x
திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ மீது புகார் மனு அளிக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், அளித்த புகார் மனுவில், கடந்த 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருகையின் போது, வைகோ தலைமையில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது, கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் வைகோ பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்