11 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு : பிப். 7-ல் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள திமுக கோரிக்கை

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 எம்எல்ஏக்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு : பிப். 7-ல் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள திமுக கோரிக்கை
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கை பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் நீதிபதி அசோக் பூஷன் இல்லாததால் வழக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து வழக்கை 7-ஆம் தேதி எடுத்துக்கொள்ளுமாறு திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வேண்டுகோள் விடுத்தார். இதனை பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்