"தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி இல்லை" - காங்கிரஸ் அறிவிப்பு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ள காங்கிரஸ், எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி இல்லை - காங்கிரஸ் அறிவிப்பு
x
அமராவதியில் நடந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 175 சட்டமன்ற தொகுதி மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். தெலுங்கு தேசம் கட்சி உடன் கூட்டணி என்பது தேசிய அளவில் மட்டுமே எனவும் அவர் விளக்கம் அளித்தார். ஆந்திரா தேர்தல்களில் கூட்டணி தொடரும் என சந்திரபாபு நாயுடுவும்,  ராகுல் காந்தியும் அறிவித்து இருந்த நிலையில் திடீரென இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்