தமிழகத்துக்கு தாமிர ஆலையே வேண்டாம் - தினகரன்

"ஸ்டெர்லைட் விவகாரம் : மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர்"
தமிழகத்துக்கு தாமிர ஆலையே வேண்டாம் - தினகரன்
x
தமிழகத்துக்கு தாமிர ஆலையே வேண்டாம் என அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவையில் சிறப்புச் சட்டம் நிறைவேற்றி,  அதை சட்டமாக்கினால் இந்த பிரச்சினை வராது என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போது வரை மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர் என்றும், தமிழக அரசு இதை எவ்வாறு கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்து  பார்க்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்