"எத்தனை பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்?" - முத்தரசன்

"முந்தைய முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை"
எத்தனை பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்? - முத்தரசன்
x
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என கடந்த தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா கூறியதை, அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராடும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வுக்காண வேண்டும் என்றார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரவேற்கதக்கது என்று தெரிவித்த முத்தரசன், முந்தைய மாநாடு மூலம் வந்த நிறுவனங்கள் என்னென்ன? முதலீடு எவ்வளவு? எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்