ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரை ஆஜர்

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
x
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை தொடர்ந்து, இன்று தம்பிதுரை ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவருக்கு தெரிந்த விவரங்கள், சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததற்கான காரணம், ஜெயலலிதா இறப்புக்கு சொத்து வழக்கு தொடர்ந்த தி.மு.கவும் காரணம் எனக் கூறியது ஏன்?, ஜெயலலிதாவை பார்த்தவர்கள் பெயர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை தம்பிதுரையிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், இன்றே குறுக்கு விசாரணை செய்ய உள்ளார். தம்பிதுரையை தொடர்ந்து, துணை முதலமைச்சர், அமைச்சர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்