அமைச்சர் கலந்து கொள்ளாத அரசு நிகழ்ச்சியில் பெண் எம்எல்ஏ கலந்து கொள்ள மக்கள் எதிர்ப்பு

பண்ருட்டி அருகே அமைச்சர் சம்பத் கலந்து கொள்ளாத அரசு நிகழ்ச்சியில் பெண் எம்எல்ஏ கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அரசு விழா பாதியில் நிறுத்தப்பட்டது.
அமைச்சர் கலந்து கொள்ளாத அரசு நிகழ்ச்சியில் பெண் எம்எல்ஏ கலந்து கொள்ள மக்கள் எதிர்ப்பு
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள தொகுதியின் எம்எல்ஏ,  சத்யா பன்னீர்செல்வம் வந்திருந்தார். ஆனால் அமைச்சர் சம்பத் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து எம்எல்ஏவிற்கு எதிராக அமைச்சரின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் பூமிபூஜை விழா நிறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்