சிறுமி பலாத்கார வழக்கு : திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பலாத்காரம் செய்து உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி பலாத்கார வழக்கு : திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை - சிறப்பு நீதிமன்றம் அதிரடி
x
* கடந்த 2012-ஆம் ஆண்டில், பெரம்பலூர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரின் வீட்டில் வேலை பார்த்து வந்த 15 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

* இதையடுத்து ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மீது பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு  நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 42 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

* எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்