சேவூரில் 2 அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழா : விழாவை புறக்கணித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் 20 லட்சம் மதிப்புள்ள அரசு கூட்டுறவு கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பங்கேற்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story