"2019 ஜனவரியில் 467 கலைஞர்களுக்கு விருது" - கடம்பூர் ராஜூ பேச்சு
சென்னை மணப்பாக்கத்தில் திரையரங்கு மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க துவக்க விழா நடைபெற்றது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு சங்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, திரைப்பட தயாரிப்பாளர்கள், வினியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றுப்பட்டு செயல்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். மேலும் வருகிற ஜனவரி மாதம், 467 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ விழாவில் உரையாற்றினார்.
Next Story