"மக்களின் வறுமையை பயன்படுத்தி ஆட்சிக்கு வருகிறார்கள்" - சீமான் புகார்

இலவசங்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மக்களை வைத்துள்ளார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களின் வறுமையை பயன்படுத்தி ஆட்சிக்கு வருகிறார்கள் - சீமான் புகார்
x
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்தி சிலை அருகே நடந்த நாம் தமிழர் கட்சி பொது கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை தெரிவித்தார். தமிழ்நாட்டின் இன எழுச்சிக்காக தீக்குளித்து உயிர் இழந்த அப்துல் ரசாக்கின்  நினைவை போற்றும் வகையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதாகவும் சீமான் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்