மேகதாது விவகாரம் : சோனியா, ராகுலுடன் பேசினேன் - திமுக தலைவர் ஸ்டாலின்

மேகதாது விவகாரம் : சோனியா, ராகுலுடன் பேசினேன் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் சென்னை திரும்பிய ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.பாஜக ஆட்சியை அகற்ற அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளததை சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பொருளாதாரம் மீது நடத்தப்பட்டுள்ள சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்ற நிலையில் தான் மத்தியில் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதாவும் கூறினார். மேகதாது அணை திட்டம் தொடர்பாக,சோனியா, ராகுல் மற்றும் தேவகவுடாவுடன் பேசியதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்