பலத்த பாதுகாப்புடன் தெலங்கானா, ராஜஸ்தான் வாக்குப்பதிவு : வரிசையில் நின்று வாக்களித்த நடிகர்கள்...

தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பலத்த பாதுகாப்புடன் தெலங்கானா, ராஜஸ்தான் வாக்குப்பதிவு : வரிசையில் நின்று வாக்களித்த நடிகர்கள்...
x
தெலுங்கானாவின் 119 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானின் 200 தொகுதிகளுக்குமான வாக்குபதிவு, பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகளுக்கு இடையே மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள ஜூப்பிலீ ஹில்ஸில் உள்ள வாக்குச்சாவடியில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மற்றும் அவரது மனைவி அமலா வரிசையில் நின்று வாக்களித்தனர். நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சீரஞ்சீவி வாக்களித்தார். நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது மனைவி மற்றும் தாயுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார். இதேபோல, ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட கலாச்சார மையத்தில், நடிகர் வெங்கடேஷ் வாக்களித்தார். பிரபல டென்னிஸ் வீராங்கணையான சானியா மிர்சா ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தெலுங்கானாவில் காலை 11 மணி நிலவரப்படி, 23 புள்ளி 4 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜாலாவார் தொகுதியில் போட்டியிடும் பாஜக முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஜால்ராபட்டன் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக அங்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்