அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்
விதிமீறல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுபோல, மதுரையில் 'சர்கார்' பட திரையரங்கு முன் போராட்டம் நடத்தியதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக ராஜன் செல்லப்பா மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
Next Story