தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - சத்ய பிரதா சாஹு, சுனில் அரோராவுக்கு கடிதம்

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் எத்தனை? - சத்ய பிரதா சாஹு,  சுனில் அரோராவுக்கு கடிதம்
x
சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழ்நாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதியில், இதுவரை யாராவது மேல் முறையீடு செய்துள்ளார்களா என கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்துக்கு பதிலளித்துள்ள தமிழக தேர்தல் 
அதிகாரி சத்ய பிரதா சாஹு , இதுவரை அவ்வாறு யாரும் மேல் முறையீடு செய்யவில்லை என பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு மற்றும் திருவாரூர் தொகுதி குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் மேல் முறையீடு செய்வதற்கு, வரும் ஜனவரி 25 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்