இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் - ஸ்டாலின்

புயலால் பாதித்த மக்களை காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பது வேண்டுகோள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் - ஸ்டாலின்
x
பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய ஆட்சியாளர்களோ, தி.மு.க. மீது பாய்ந்து, திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். புயலால் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை  என மக்கள் எழுப்பும் அவலக்குரலை அப்படியே எதிரொலிக்க வேண்டியது  எதிர்க்கட்சியின் கடமை எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு, இம்முறையாவது மாற்றாந்தாய்  மனப்பான்மையுடன்  செயல்படாமல், நிவாரண நிதியை தாராளமாக வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்